Header Ads



அக்கரைப்பற்றில் காட்டு யானைகளின் அட்டகாசம் (படங்கள் இணைப்பு)


(ஏ.ஜி.ஏ.கபூர்)

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு கிராமத்தினுள் இன்று சனிக்கிழமை அதிகாலை (22)யானைக் கூட்டமொன்று தென்னந் தோட்டமொன்றுக்குள் புகுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் இத் தோட்டப் பிரதேசங்களில் வசித்த மக்களும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

புள்ளிக்குடியிருப்பு-02ல் உள்ள ஓய்வு பெற்ற விவசாயப் போதனாசிரியர் எம்.ஏ.எம்.ஹாஸீம் என்பவரது தோட்டத்தினுள் சனிக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகள் தோட்டத்தில் இருந்த சுமார் எழுபது தென்னை மரங்கள், பலா, வாழை, அறுவடைக்குத் தயாராக இருந்த மிளகாய் செடிகள் முதலிய பயிர்களை முறித்தும் , மிதித்தும் நாசம் செய்து பாரிய சேதத்தை உண்டுபண்ணியுள்ளது. இதனால் பல இலட்சம் ருபா நஸ்டமேற்பட்டுள்ளதாகவும் இது பற்றி அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹாஷிம் தெரிவித்தார்.

இச் சம்பவம் பற்றி அறிந்த அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் அவர்கள் சேதமடைந்த தென்னந் தோட்டத்திற்குச் சென்று சேதங்களைப் பார்வையிட்டதோடு, தோட்டச் சொந்தக் காரரான ஓய்வு பெற்ற விவசாயப் போதனாசிரியர் எம்.ஏ.எம்.ஹாஸீம் அவர்களிடமும் கலந்துரையாடியதோடு, உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு யானைகளிடமிருந்து மக்களையும், பயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

இதேபோன்று கடந்த ஒருவாரகாலமாக அக்கரைப்பற்று இசங்கணிச்சீமை.ஆலிம் நகர், பள்ளிக்குடியிருப்பு, மொட்டையான்ர வெளி முதலிய பிரதேசங்களில் குடியிருப்புப் பிரதேசம் மற்றும் தென்னை முதலிய மேட்டு நிலப் பயிர் செய்கைகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை,வாழை,பலா,மிளகாய், மரவள்ளி முதலிய பயிர்களை நாசமாக்கி பாரிய சேதத்தையும், நஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்களள் தெரிவிக்கின்றனர்.

குhட்டு யானைகள் குடியிருப்புப் பிரதேசங்களுக்குள்ளும், பயிh நிலங்கள் .தோட்டங்களுக்குள்ளும் வருவதனைத் தடுத்து நிறுத்திதமது உயிருக்கும் , பயிர் முதலிய சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பதைத் தடுக்துப் பாதுகாக்க உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொதுமக்கள் கோருகின்றனர். 




No comments

Powered by Blogger.