Header Ads



சிங்கள ராவய பொதுச் செயலாளருக்கு நீதிமன்ற பிடியாணை

சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

சட்டக் கல்லூரியின் மாணவர் ஒருவர் கூரை மீது ஏறி எதிர்ப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தேரருக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு அமைய பஞ்ஞாலோக்க தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்தே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.