நிந்தவூரில் யானையின் சடலம் மீட்பு (படங்கள்)
(எம்.ஏ.றமீஸ்)
நிந்தவூர் அல்லிமூலை உள் ஆத்துக் கட்டு வயற் பிரதேசத்தில் யானையொன்று இறந்த நிலையில் காணப்படுகின்றது. இன்று அதிகாலை இந்த யானை இறந்ததாக இப்பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர.
நேற்றுமுன்தினம் இப்பிரதேசத்தில் இந்த யானை சுகவீனமுற்ற நிலையில் நடமாடியதாக நேரில் கண்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள குளத்தில் நீர் அருந்திய இவ்யானை குளக்கட்டினால் ஏறுவதற்கு முடியாமல் தத்தளித்ததாகவும், பின்னர் இது வயற்பிரதேசத்தில் வந்த போது இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தள காட்டிலுள்ள யானைகளை விரட்டியடித்தால் அவைகள் எங்கெல்லாம் போய் சேதம் விழைவிக்கும். சிலவேளைகளில் மரணம் கூட வரலாம். மக்களும் அவைகளை கொல்லலாம் தமது பாதுகாப்பு கருதி. இவைகளுக்கு காரண கர்த்தாக்கள் யார்.
ReplyDelete