Header Ads



மண்டை ஓட்டில் சிக்கிய குண்டு - 48 ஆண்டுகளுக்கு பின் நீக்கம்

சீனாவில், பெண்ணின், மண்டை ஓட்டுக்குள், சிக்கி இருந்த துப்பாக்கி குண்டு, 48 ஆண்டுகளுக்கு பின், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. சீனா, லியோனிங் மாகாணத்தை சேர்ந்தவர், ஷாவோ, 62. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தலைவலி, உள்ளிட்டவற்றால், பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர், மருத்துவ மனைக்கு சென்றார். அவரை டாக்டர்கள், பரிசோதித்த போது, ஷாவோவின், மூக்கு பகுதியில், துப்பாக்கி குண்டு சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஷாவோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த பின், மேல் உதட்டில் சிறு துளையிட்டு, துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது.

"ஷாவோவின் மண்டை ஓட்டுக்குள் புகுந்த குண்டு, மூக்கு பகுதியில் இறங்கியுள்ளது; அந்த குண்டு மூளைக்கு சென்றிருந்தால், அவரை காப்பாற்றியிருக்க முடியாது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.