Header Ads



மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 15 வயது முஸ்லிம் சிறுவன் வபாத்

கண்டி கட்டுகஸ் தோட்டையில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 15 வயதான முஸ்லிம் சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை நண்பகல் 12.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ் தோட்டை மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுவன் நீராடச் சென்றவேளை நீரில் மூழ்கியே உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனைகள் மூலம் உறுதியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரிசோதனைகளைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.