Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழக செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகிறது



யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்விச் செயற்பாடுகள் 08-01-2013 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீடங்களுக்குமான பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்களுக்கிடையில் சந்திபபொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்திப்பின் போதே மீண்டும் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பதட்ட சூழ்நிலையினால் பிற்போடப்பட்ட கலைப்பீட  மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதகாலத்திற்கும்  மேலாக கைதான பல்கலை மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யக் கோரி மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.



No comments

Powered by Blogger.