Header Ads



மூதூரில் புதிதாக அமைக்கப்பட்ட பஸார் பள்ளிவாசலுக்கான புதிய கட்டட திறப்பு விழா



(மூதூர் முறாசில்)

மூதூரில் புதிதாக அமைக்கப்பட்ட பஸார் பள்ளிவாசலுக்கான புதிய கட்டட  திறப்பு விழா நிகழ்வு நாளை 21-12-2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ  தொழுகையுடன் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் 'குத்துபா' பேருரையை எம்.எல்.முபாரக் மதனி நிகழ்த்தவுள்ளதுடன்அப்துல் அஸீஸ் ஹுமைன் அல் ஹுமைன் , அஷஷய்க்   முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் ஸெய்னுதீன் எஸ். பரீத் அவர்களால் எழுதப்பட்ட 'அதிசய நீரூற்று ஸம்ஸம்' என்னும் நூலும்   வெளியீடு செய்யப்படவுள்ளது.

இவ்வைபவத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பஸார் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினால் கேட்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.