Header Ads



இந்த சிறுமிக்கு உதவ முன்வாருங்கள்..!

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலுக்கோமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவிக்கரம் கோரல்

புத்தளம் ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.கபூர் என்பவரின் மகள் பாத்திமா றிகாஸா (வயது 08) என்ற சிறுமி இலுக்கோமியா (LEUKEMIA எலும்பு மச்சை மற்றும் இரத்தம் மாற்றுதல்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மீனாட்சி சுந்தரம் வைத்தியசாலை வைத்தியர்கள் இணங்கண்டுள்ளதுடன் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமெனவும் இதற்காக சுமார் 25இலட்சம் ரூபா செலவாகும் எனவும் மதிப்பிட்டுள்ளனர்.

04 பிள்ளைகளின் தந்தையாகிய இவருடைய தந்தை கபூர் ஒரு ஆட்டோ சாரதியாக இருப்பதால் இவரினால் இந்த தொகையை ஈடு செய்ய முடியாமல் சிரமப்படுவதோடு இச்சிறுமியின் தாய் ஒரு வருடத்திற்கு முன்னர் மரணமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்பதால் தனவந்தர்கள் நல்ல மனம் படைத்தவர்கள் இச்சிறுமியின் நோய் நிலையினை கருத்திற் கொண்டு உங்களது உதவிக்கரங்களை நீட்டுவதற்கு முன்வருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.

உதவிகளை செய்ய விரும்புவோர் கபூர் இலங்கை வங்கி கணக்கு இல:- 71449879 எனும் இலக்கத்திற்கு தம்மாலான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலதிக விபரங்களுக்கு 011-5724214' 0723584862 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும்.










No comments

Powered by Blogger.