அக்குறணை ஸாஹிராவின் மதில் உடைந்தது - பாடசாலை கட்டிடங்களுக்கு பாதிப்பு (படங்கள்)
(ஜே.எம்.ஹபீஸ்)
அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுமார் 300 அடி நீளமுள்ள பாதுகாப்பு மதில் உடைந்ததன் காரணமாக பிரதான மும்மாடிக் கட்டிடம் உற்பட மேலும் மூன்று கட்டிடங்கள் பாதிப்புக்கு உள்ளாகிவுள்ளன.
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (19) அதிகாலை இம் மதில் இடிந்து விழுந்துள்ளது. இம் மதிலை வெகு விரைவில் புனரமைக்கா விட்டால் பாடசாலையின் மூன்று பிரதான கட்டிடங்களும் உடைந்து விழும் அபாயம் உள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவிக்கின்றது.
Post a Comment