நரேந்திர மோடி மீண்டும் வெற்றி - பின்னோக்கி திரும்பிபார்க்க வேண்டிய அவசியம் இல்லையாம்
குஜராத் மாநில தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. நரேந்திர மோடி முதல்- மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர் பாக அவர் "டுவிட்டர்'' இணையத் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான நேரம் வந்து விட்டது. இனி நாம் பின்னோக்கி திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லையற்ற முன்னேற்றம் அது ஒன்றே நமது இலக்காக இருத்தல் வேண்டும்.
எல்லையற்ற ஆற்றல், எல்லையற்ற வீரம், எல்லையற்ற சகிப்புத் தன்மையே நமக்கு தேவை. இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Post a Comment