ஈராக் ஜனாதிபதிக்கு பக்கவாதம்..?
ஈராக் அதிபர் ஜலால் தலபானி, பக்கவாதம் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஈராக் அதிபர் ஜலால் தலபானி வயது 79. குர்த் இனத்தைச் சேர்ந்தவர். இவர், ஈராக்கில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்.
நேற்று முன்தினம், இவரது மூளை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், பக்கவாதம் ஏற்பட்டு, நினைவிழந்தார். உடனடியாக, பாக்தாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிக், மருத்துவமனைக்கு சென்று, அதிபரின் உடல் நலனை விசாரித்தார்.
Post a Comment