Header Ads



கெட்ட வார்த்தை கூறிய 'மைனா' க்கு சிறைத்தண்டனை


(தற்போதைய செய்திகள்) சீனாவின் மத்தியப்பகுதியில் உள்ள வூஹான் மாகாணத்தின் ஜியூஃபெங் காட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் மைனாப் பறவை சுற்றுலாப்பயணிகளை நோக்கி கெட்ட வார்த்தையில் பேசியதால் அதனை அதன் இருப்பிடத்திலேயே அடைத்து வைத்து தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விசித்திரம் நடந்துள்ளது.


இந்த மைனாப்பறவை பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவே பேசப்பழக்கபப்டுத்தப்பட்ட அதிசய மைனாவாகும்.பேசத்தெரிந்தால் நம் மக்கள் சும்மாயிருப்பார்களா? அதனை வம்புக்கு இழுப்பார்கள். அது சில கெட்டவார்த்தையை பயன்படுத்துமாறு செய்கைகளை செய்தால் அது தானாகவே அந்த வார்த்தைகளைப் பேசிவிடும். இந்த சம்பவமும் அப்படித்தான் நடந்துள்ளது.

மைனாவிடம் கெட்ட வார்த்தைகளை பேசாதீர்கள் என்று எச்சரிக்கைப் பலகையே இந்த காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்களின் செய்கையை திருப்பிச் செய்த குற்றத்திற்காக இப்போது தனிமைச் சிறையில் மைனா வாடி வருகிறது.அதற்கு உணவு கொடுக்காமல் அத்தகைய வார்த்தைகளை மறக்குமாறு செய்வார்களாம் காட்சி சாலை சிறப்பு நிபுணர்கள்!

No comments

Powered by Blogger.