கல்குடா பிரதேசத்தில் வெள்ள அபாயம் - பொது கட்டிடங்களை நோக்கி மக்கள் விரைவு (படங்கள்)
(அஹ்மட் லெப்பை ஜுனைத்தீன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளன. உன்னிச்சை குளம், வாகனேரிக்குளாம், மாதுரு ஓய ஆறு என்பன பெருக்கெடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கனக்கான ஏக்கர் வயல் நிலங்கள் உள்ளிட்ட நூற்றுக்கனக்கான வீடுகளும் பாதிப்படைந்துள்ளன. படகு மூலம் மீட்புப்பணிகள் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதே வேளை மக்கள் இடம்பெயர்ந்து பொதுக்கட்டிடங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment