மரத்தில் ஏறி போராட்டம் - மஹிந்த அல்லது கோத்தா வாக்குறுதி வழங்க வேண்டுமாம் (படம்)
கோல்டன் கீ விவகாரத்தில் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி கொழும்பு உயர் நீதிமன்றுக்கு முன்னால் உள்ள மரத்தில் ஏறி குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
கேகாலை மாவட்டம், றம்புக்கனை பகுதியைச் சேர்ந்த சமன் சாந்த (43) என்பவரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரில் ஒருவர் வந்து தன்னைப் பார்வையிட்டு வாக்குறுதியளிக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடரப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
Post a Comment