Header Ads



வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ புத்தளத்தில் நிவாரணம் சேகரிப்பு


(அபூ நாதில் )

சிலாபம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட  ஜயபிம, சவராண, வட்டக்களி போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களுக்காக புத்தளத்தில் உலர் உணவுப் பொருட்கள் சேகரிப்பட்டு வருகின்றன. புத்தளம் பெரிய பள்ளியின் அனர்த்த நிவாரணக் குழு  உலர் உணவுப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. 

அரிசி, மா, பரிப்பு, வெங்காயம், சீனி,  டின் மீன், தேங்காய், தேயிலை, மசாலா தூள் போன்ற பொருட்களை பொது மக்கள் கொடுத்து உதவுமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

இன்று பிற்பகல்  புத்தளம் நகர வர்த்தகர்களிடமிருந்து உலர் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நாளை 
21.12.2012 வெள்ளிக்கிழமை பி.ப. 2 மணி முதல் புத்தளம் நகர குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பொருள் சேகரிப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வீடு வாசல்களை இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள எமது சகோதர்களுக்கு உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.