நீதிமன்றத்திற்கு வாருங்கள் - சபாநாயகருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
(tm) நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் தனக்கு இருப்பதாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று 21-12-2012 அறிவித்தது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கும் தெரிவுக்குழு அங்கத்தவர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சபாநாயகரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களும் பிரதம நீதியரசரின் உரிமைகளை அவமதிக்கும் வகையில் செயற்படக் கூடாதெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தற்போதைய நிலைமை மற்றும் எந்தவொரு நடவடிக்கையும் குழப்பமானதொரு நிலைமையை தோற்றுவிக்கலாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
Post a Comment