மாணவிகளுக்கு வந்த ஆத்திரம் - ஆசிரியைகள் சிறை பிடிப்பு - பொலிஸார் சுற்றிவளைப்பு
தேர்வில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் சில ஆசிரியைகளை சிறைபிடித்த சம்பவம் இந்தியா கோல்கட்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோல்கட்டாவில் உள்ள ரிஷி அரபிந்தோ பாலிகா வித்யாலயாவில் படித்து வரும் மாணவிகள் 29 பேர், தாங்கள் தேர்வில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்து தங்களது பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீமதி கோஷ் மற்றும் சில ஆசிரியைகளை சிறைபிடித்தனர். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் பள்ளியை சுற்றி வளைத்துள்ளனர்.
Post a Comment