Header Ads



நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் இலங்கையர்களே - பிரதமர் தி.மு.ஜயரத்தன


(ஜே.எம்.ஹபீஸ்)

இனத்தின் பெயரால் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் இலங்கையர்களே என்று பிரதமர் தி.மு.ஜயரத்தன தெரிவித்தார்.

வடக்குத் தெற்குப் பரிமாற்றுத்திட்டத்தின் கீழ் வடபகுதி அறநெறிப்பாடசாலை இந்து மாணவர்களும், தெற்கு தர்மப் பாடசாலை பௌத்த  மாணவர்களும் ஒன்றிணைந்து நடத்திய கலாசார விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார். வடபகுதி மாணவர்கள் தெற்கிற்கு வந்து பல இடங்களையும் பார்வையிட்டபின் இறுதினால் இடம் பெற்ற மேற்படி வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் எதிர் காலத்தை பொறுப் பேற்கவுள்ள மாணவர்கள் மதவேறு பாடுகளை கருத்திற் கொள்ளாது கல்வியில் கூடிய நாட்டம் காட்டுதல் வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள சகல பிரஜைகளையும் சமமாக மதித்து நடப்பதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது கொள்கையாகும். கடந்த காலங்களில் இந்த சம சந்தர்பம் தொடர்பான விடயத்தில் விடுதலைப் புலிகளது நடவடிக்கை காரணமாக சிறிய உடைவு ஏற்பட்டிருந்தது. அதிலும் கூடுதலாக வடபகுதி மக்களே பாதிக்கப்ப்டனர். அதிலும் மாணவர்களது நிலைமை மிகக் கவலையாக இருந்தது என்றார்.



No comments

Powered by Blogger.