Header Ads



அமெரிக்காவில் மீண்டும் பீதி - பாடசாலைகள் மீது மர்ம மனிதன் தாக்கலாமென பரபரப்பு



அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணம் நியூடவுண் நகரில் உள்ளது சாண்டி ஹூக் தொடக்க பள்ளி. இங்கு கடந்த 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளி ஆசிரியை நான்சியின் 2வது மகன் ஆடம் லான்சா (20) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் 20 குழந்தைகள், பள்ளி முதல்வர், மனநல பிரிவு ஆசிரியர் உள்பட 28 பேர் பலியாயினர். வீட்டில் அம்மா நான்சியை கொன்று விட்டு பள்ளிக்கு ஆடம் வந்து சரமாரி துப்பாக்கிச் சூடு தானும் தற்கொலை செய்து கொண் டான். 

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், நியூடவுண் நகரில் இருந்த 32 கி.மீ. தொலைவில் உள்ள ரிட்ஜ்பீல்டு நகரில் உள்ள பள்ளிகளில் மர்ம மனிதன் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தலாம் என்று போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ரிட்ஜ்பீட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. எல்லா பள்ளிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.