Header Ads



மாயன் ஏமாந்தான்......!



(அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் )

காயம் படாமல்
 கழிந்தது இன்று
 மாயன் ஏமாந்தான்
 மனிதர்களை மூடர்களாக்கி

உடைந்தது மூடநம்பிக்கை
 உலகம் அழிவென்பது
 படைத்தவன் கைவசம்
 பாருணர்ந்துப் பார்க்குமா?

குர்-ஆன் ஹதீஸ் வாக்குறுதி
 குறைவிலாச் செயலுறுதி
 ஒருநாளும் பொய்க்காது
 ஒப்புக்கொள் மானிடனே!

இரவல் கொடுத்தவன்
 இறைவன் ஒருவன்
 இரவும் பகலும்
 இயக்கும் அருளவன்!

அழிந்து விட்டதாய்
 அங்கலாய்த்த மாயானர்
 கழிந்தக் குற்றத்தை
 கணமேனும் அறிவாரோ?

No comments

Powered by Blogger.