மாயன் ஏமாந்தான்......!
(அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் )
காயம் படாமல்
கழிந்தது இன்று
மாயன் ஏமாந்தான்
மனிதர்களை மூடர்களாக்கி
உடைந்தது மூடநம்பிக்கை
உலகம் அழிவென்பது
படைத்தவன் கைவசம்
பாருணர்ந்துப் பார்க்குமா?
குர்-ஆன் ஹதீஸ் வாக்குறுதி
குறைவிலாச் செயலுறுதி
ஒருநாளும் பொய்க்காது
ஒப்புக்கொள் மானிடனே!
இரவல் கொடுத்தவன்
இறைவன் ஒருவன்
இரவும் பகலும்
இயக்கும் அருளவன்!
அழிந்து விட்டதாய்
அங்கலாய்த்த மாயானர்
கழிந்தக் குற்றத்தை
கணமேனும் அறிவாரோ?
Post a Comment