Header Ads



உலகம் அழியும் பீதியை கிளப்பியவர்கள் 93 பேர் கைது


இந்த வாரம் உலகம் அழியும்' என, துண்டு பிரசுரங்களை விநியோகித்து பீதி கிளப்பிய, 93 பேர், சீனாவில் கைது செய்யப்பட்டனர்.nதென் அமெரிக்காவில் பண்டைய காலத்தில் வாழ்ந்த, "மாயன்' இனத்தவரின் காலண்டரில், "இந்த வாரம் உலகம் அழியும்' என குறிப்பிடப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். உலக முழுவதும் இந்த காலண்டரின் கருத்தை நம்பும் பலர், உலகம் அழிவதை தடுப்பதற்காக, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில், "அல்மைட்டி காட்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், "இந்த வாரம் உலகம் அழிந்து விடும், எனவே, இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் ஒப்படைத்து விட வேண்டும்' என, கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள், சீனாவின் புஜியான், ஹூபி, சின்ஜியாங், குங் காய் உள்ளிட்ட பல மாகாணங்களில், துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.உலகம் அழிந்து விடும் என, மக்களை பீதியடைய செய்ததற்காக, இந்த அமைப்பை சேர்ந்த, 93 பேரை, சீன போலீசார் கைது செய்துள்ளனர். 

No comments

Powered by Blogger.