Header Ads



திஸ்ஸமகாராமயில் படகு கவிழ்ந்தது - 5 பேர் பலி - மற்றும் சிலரை காணவில்லை

திஸ்ஸமகாராம - திஸ்ஸ வாவியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்தவர்களில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திஸ்ஸமஹாராம காவல்துறை பொறுப்பதிகாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள மேலும் இருவரை தேடும் பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த படகில் 21 பேர் பயணித்துள்ளனர். கதிர்காமத்திற்கான யாத்திரை சென்ற உருக்கு வேலி உற்பத்தி தொழிற்சாலையொன்றின் பணியாளர்களே இன்று 22-12-2012 பிற்பகல் 3.30 அளவில் அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

குறித்த படகில் பயணித்தவர்களும், படகு செலுத்துனரும் மது போதையில் இருந்ததாக அதில் பயணித்து மீட்கப்பட்ட ஒருவர், படகில் 30 பேர் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே தாம் பயணிக்க தயாரானதாக அவர் கூறினார். அரை கிலோமீற்றர் வரை சென்ற போது செலுத்துனர், படகை திருப்ப முனைந்த போது அது கவிழ்ந்தது. நீச்சல் தெரிந்தவர்கள் கரைசேர்ந்தார்கள், தொழிற்சாலை மேற்பார்வையாளர் உள்ளிட்ட சிலர் காணாமல் போனதாகவும் அந்த ஊழியர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.