Header Ads



58 லட்சம் போலி அமெரிக்க டொலர்களுடன் வெளிநாட்டவர் இருவர் கொழும்பில் கைது


சுமார் 58 லட்சம் பெறுமதியான போலி அமெரிக்க டொலர்கள் மற்றும் 450 நூறு ரூபா தாள்களை  நாணய தாள்களுடன் வெளிநாட்டு ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான ஹேட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து இவர்கள் விசேட காவல்துறை பிரிவினரால் நேற்ற இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட காவல்துறை பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  இந்த கைது இடம்பெற்றுள்ளது. கெமருன் மற்றும் மாலி இனத்தவர்களான இவர்கள் பயன்படுத்திய  மோட்டர் வண்டியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மோட்டார் வண்டியினை சோதனை செய்த போது போலி நாணய தாள்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 200 கடதாசிகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.