Header Ads



ஓய்வுபெறும் வயதெல்லை 57 ஆக உயர்வு


(எம். எஸ். பாஹிம்)

அரசாங்க பொது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையையும் 57 வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. நிதி, திட்ட அமுலாக்கல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்தார். 

அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய காலத்தை 57 ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்த சலுகையை அரச பொது நிறுவன ஊழியர்களுக்கும் வழங்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.