Header Ads



சோமாலியாவில் படகு கடலில் மூழ்கியது - 55 பேர் மரணம்



சோமாலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பசாசோ துறைமுகத்திலிருந்து ஏடன் வளைகுடா கடல் வழியாக ஒரு படகு புறப்பட்டு சென்றது. படகில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் புறப்பட்ட 15-வது நிமிடத்தில் அந்தப் படகு கவிழ்ந்தது. அதில் பயணித்த 55 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 23 பேரின் உடல்களை மீட்புப்படையினர் வெளியே எடுத்துள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. 5 பேர் மட்டும் நீந்தி கரையேறியுள்ளனர்.

இச்செய்தியை ஐ.நா. அகதிகள் அமைப்பு உறுதி செய்துள்ளது. இறந்தவர்கள் பெரும்பாலும் சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த வருடத்தில் மட்டும் இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.