மழை + வெள்ளம் - 25 பேர் பலி, 19 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்வு
நாட்டின் பல பாகங்களில் அனர்த்தத்தை ஏற்படுத்திய காலநிலை சீர்கேடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 4 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த காலநிலை சீர்கேடு காரணமாக 25 பேர் பலியானதுடன், 14 பேரை இதுவரை காணவில்லை என மத்திய நிலையத்தின் ஊடக பிரிவு அதிகாரி சரத் லால் குமார தெரிவித்தார். 18 ஆயிரத்து 753 பேர் தத்தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்களில் 102 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்ககாட்டுகிறது.
இயற்கை அனரத்தங்கள் காரணமாக 36 பேர் காயமடைந்துள்ளனர், இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலையால் 358 வீடுகள் முற்றாகவும் 900ற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
Post a Comment