நாட்டில் இயற்கையின் சீற்றம் - 11 பேர் மரணம் - 22.000 பேர் பாதிப்பு
கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களில் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக, ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே,இதுவரையில் 5 ஆயிரத்து 202 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பிரிவு பிரதி பணிப்பாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடும் மழைக்காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள 72 நீர்தேக்கங்களின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளதாக நீர் பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில், 9ன் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment