Header Ads



வெளிநாட்டு வெள்ளையர்கள் அழுத்தம் கொடுப்பது வெட்கக்கேடான செயற்பாடு - சஜித்

அரசு விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற்ற போதிலும் நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்யத் தெரியவில்லை என ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து கருத்துரைக்கைகயிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு நியமித்த உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்தும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுப்பது வேடிக்கையாகவுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள், வெளிநாட்டுக் குழுக்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். யுத்தத்தை வென்ற அரசுக்கு நாட்டை ஆட்சி செய்யத் தெரியவில்லை. அரசே உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்தது. அதன் அங்கத்தவர்களையும் இந்த அரசே நியமித்தது.

இக்குழுவில் அமெரிக்க, பிரிட்டன் பிரதிநிதிகள் இல்லை. ஆனால் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்தும்படி வெளிநாட்டு வெள்ளையர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமா? இது வெட்கக் கேடான செயற்பாடாகும். இலங்கையில் புலிப் பயங்கரவாதம் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தோற்கடிக்கப்பட வேண்டியதாகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு நாம் நிரந்தரமான ஒரு தீர்வை வழங்க வேண்டும். என்றார்.





No comments

Powered by Blogger.