Header Ads



மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பேசுபவர் மீது புலி முத்திரை பதிக்கப்படுகின்றது-கரு ஜயசூரிய


நாட்டில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயருடன் நாட்டு மக்களை ஏமாற்றும் நடைமுறைகள் உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக எவ் விதத்திலாவது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,மனித உரிமைகள் தொடர்பிலும் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் எவரேனும் பேசுவார்களாயின் நாட்டில் அவர்கள் மீது புலி முத்திரை பதிக்கப்படுகின்றது.,மேலும் அவர்களிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

இலங்கை அரசின்  செயற்பாடுகள் காரணமாக பல நட்புறவு நாடுகள் வெறுப்படைந்துள்ளதாகவும்,ஜெனீவா செல்வதன் மூலம் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புக்களை அனுமதிக்க முடியாது எனவும், இந்த விடயங்களின் ஊடாக நாட்டில் நிலவுகின்ற பாரிய பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு முற்படுவார்களாயின், அதனை தவறான செயற்பாடாகவே தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதெனவும், துரதிஷ்டவசமாக நட்புறவு நாடுகளை அரசு பகைத்துக்கொண்டுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.