Header Ads



பாபரி மஸ்ஜித் தகர்ப்புக்கு காரணமான பாரதீய ஜனதா கட்சி அயோத்தில் தோற்றுப்போனது

வகுப்புவாத அஜண்டாவை துருப்புச சீட்டாக பயன்படுத்தி உ.பி தேர்தல் களத்தில் இறங்கிய பாரதீய ஜனதா கட்சிக்கு 3-வது இடத்துடன் திருப்தி அடையவேண்டிய சூழல் ஏற்பட்டது.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த அயோத்தியிலும் அக்கட்சி அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்துள்ளது. 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சி அயோத்தியில் தோல்வியை தழுவியுள்ளது.

பா.ஜ.க வேட்பாளர் லல்லு சிங் சமாஜ்வாதி கட்சியின் தேஜ் நாராயணன் பாண்டேயிடம் 5,405 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் - பாண்டே(55, 262), லல்லுசிங்(49,857), வேத் பிரகாஷ் குப்தா-பி.எஸ்.பி(33481), குல்ஷன் ஸ்வதா(22,023), ராஜேந்திர பிரதாப் சிங்-காங்கிரஸ்(9,710)

No comments

Powered by Blogger.