Header Ads



இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் புலமைப்பரிசில் - A/L, O/L மாணவர்கள் விண்ணப்பிக்கமுடியும்

இலங்கை மாணவர்களிடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக பாகிஸ்தான் விண்ணப்பங்களை கோரியுள்ளது. பாகிஸ்தான் ஸ்தாபகர் முஹம்மது அலி ஜின்னாவின் ஞாபகர்த்தமாக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இப் புலமைப்பரிசில் திட்டத்தினை க.பொ.த சாதாரன தரம் மற்றும் க.பொ.த உயர் தரம் ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

பொருளாதார உதவி மற்றும் பெறுபேறுகளின் அடிப்படையில் இப்புலமைப்பரிசிலுக்காக தெரிவு செய்யப்படும் மாணவர் ஒருவருக்கு வருடமொன்றிற்கு தலா 24,000 ரூபா வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை 53/6 கிறகரிஸ் வீதி, கொழும்பு – 07 என்ற முகவரியிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில்இம்மாதம் 19ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு மாத்திரம் க.பொ.த சாதாரன தரம் மற்றும் க.பொ.த உயர் தரம் ஆகியவற்றில் கல்வி கற்கும் 107 இலங்கை மாணவர்களுக்கு 2.56 மில்லியன் ரூபா ஜின்னா ஞாபகார்த்த  புலமைப்பரிசிலினை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.