Header Ads



கொழும்பில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கு திட்டமிட்ட அவமரியாதை


கொழும்பிலுள்ள சட்டவைத்திய அதிகாரிகள் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முறையான வகையில் பிரேத பரிசோதனை செய்வதில்லையென அகில இலங்கை முஸ்லிம் ஜனாஸா சங்கத்தின் தலைவர் உமர் கத்தாப் குற்றம் சுமத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரேத பரிசோதனைக்காக வெட்டப்படும் ஒருவரின் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கு ஏற்றவகையில் தைக்கப்படுவதில்லை. சிலர் பல மூபாய் பணமும் கேட்கிறார்கள். உரிய பணத்தை கொடுக்காவிட்டால் ஜனாஸாக்கள் மீது பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது.

இவாறான சம்பவங்கள் தொடராக நடைபெற்று வருகின்றது. இதுபற்றி உரிய தரப்பினருக்கு முறையிட்டு வருகிறோம் என்றார்.

No comments

Powered by Blogger.