Header Ads



இந்த முஸ்லிம் சகோதரியை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள்


கட்டார் நாட்டில் 3 வருடங்கள் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பின் இலங்கை திரும்பிய கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த பெண் காணாமல் போயுள்ளார். இவரைக் கண்டு பிடிக்க உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஆலிபு நஸீமா (வயது 31) என்ற இப்பெண்மணி கடந்த 2012 பெப்ரவரி 12ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளார். அவர் வேலை செய்த எஜமானின் தொலைபேசி அழைப்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையப் பதிவுகளை மையமாக வைத்து இதனை அறிய முடிகின்றது.

எனினும் இதுவரை இவர் வீடு வந்து சேரவில்லை. இவரது கடவுச் சீட்டு இலக்கம் N 0357093 ஆகும். எனவே, இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0773916392, 0774328590 ஆகிய ஏதாவது ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.