Header Ads



பாகிஸ்தானுக்கு விடைகொடுக்கிறது ஒஸாமா குடும்பம்..!

ஒசாமா பின்லாடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள், பாகிஸ்தானை விட்டுப் புறப்படத் தயாராகி வருகின்றனர்.

நியூயார்க் இரட்டை கோபுரத் தகர்ப்புக்குக் காரணமான ஒசாமா பின் லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில் கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அவரது மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் ஆகியோர் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஒசாமாவின் ஏமன் நாட்டை சேர்ந்த இரண்டு மனைவிகளை அழைத்து செல்ல ஏமன் நாட்டிலிருந்து ஒசாமாவின் மைத்துனர்கள், இஸ்லாமாபாத் வந்துள்ளனர். ஒசாமா குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தானை விட்டு புறப்படுவதற்குரிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவர்களுக்குப் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இரண்டொரு நாளில் ஒசாமா குடும்பத்தினர் பாகிஸ்தானை விட்டு சென்று விடுவார்கள்.

அபோதாபாத்தில் ஒசாமா கொல்லப்பட்ட வீட்டை பொது மக்கள் அடிக்கடி வந்து பார்த்து செல்வதால், அந்த வீடு கடந்த வாரம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு விட்டது.

No comments

Powered by Blogger.