Header Ads



இஸ்ரேலை புறக்கணியுங்கள் - முஸ்லிம்களுக்கு பகிரங்க அழைப்பு

பலஸ்தீன் மக்கள் மீது அட்டூழியங்களை தொடர்ந்து அரங்கேற்றி வரும் இஸ்ரேலை அரபு நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து 18-வது அரபு இண்டர் பார்லிமெண்டரி யூனியன்(எ.ஐ.பி.யு) மாநாடு நிறைவுற்றது.

இஸ்ரேலை அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியாகவும் ஆதரிக்கும் நாடுகள் மீது கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் 2 தினங்களாக நடைபெற்ற மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் அணுசக்தியை தயாரிக்கும் ஈரானின் உரிமையை மதிப்பதாக மாநாடு அறிவித்தது. சர்வதேச அணுசக்தி ஏஜன்சியுடன் ஒத்துழைத்து இதனை மேற்கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டிய மாநாடு, ஈரானின் அணுசக்தி தொடர்பாக பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தியது.

அதேவேளையில், ஜி.சி.சி நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் ஈரானின் செயலை அங்கீகரிக்க இயலாது என்றும், இவற்றை கைவிட்டு விட்டு அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவும், சர்வதேச சட்டங்களை மதிக்கவும் ஈரான் தயாராகவேண்டும் என்று மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.