இந்தியாவில் இருந்து மன்னாருக்கு நீந்தி வந்தவர் கைது
இந்தியாவில் இருந்து தலை மன்னாருக்கு நீந்தி வந்த இலங்கை பிரஜை ஒருவர் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2007 மார்ச் 23 ஆம் திகதி இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக சென்றுள்ள இவர் நீந்தி தலைமன்னாருக்கு வந்தபோதே பிடிபட்டுள்ளார். யாழ்ப்பாணம், காளிகோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் கடற்படையினரால் மேலதிக விசாணைக்காக தலைமன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment