தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 8 வயது பெண் ஒட்டகத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்
தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்த ஒட்டகமொன்று கர்ப்பமாகியுள்ளதாக கருதி அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளது. மிருக வைத்தியர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி இச்சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் மேற்படி ஒட்டகம் கர்ப்பமடையவில்லை என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒட்டகம் இறந்தமை குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுளதாக மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் பிரபாஷ்வர சேக குணரட்ன தெரிவித்தார்.
மருத்துவரின் கட்டணம், மருந்துகள் உட்பட இச்சிகிச்சைக்கு சுமார் 60,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது. ரோஸி எனப் பெயரிடப்பட்ட 8 வயதான இந்த ஒட்டகம் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். பிந்து எனப் பெயரிடப்பட்ட அதன் துணை இப்போது தனித்துள்ளது.
எனினும் மேற்படி ஒட்டகம் கர்ப்பமடையவில்லை என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒட்டகம் இறந்தமை குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுளதாக மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் பிரபாஷ்வர சேக குணரட்ன தெரிவித்தார்.
மருத்துவரின் கட்டணம், மருந்துகள் உட்பட இச்சிகிச்சைக்கு சுமார் 60,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது. ரோஸி எனப் பெயரிடப்பட்ட 8 வயதான இந்த ஒட்டகம் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். பிந்து எனப் பெயரிடப்பட்ட அதன் துணை இப்போது தனித்துள்ளது.
Post a Comment