Header Ads



இலங்கையிலிருந்து ஜேர்மனுக்கு செல்லமுயன்ற 7 ஆப்கானிஸ்தானியர்கள் கைது


போலி விசாக்களை பயன்படுத்தி ஜேர்மனுக்கு பயணிக்க முயன்ற ஆப்கானிஸ்தான் நாட்டு குடும்பம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பிடிபட்டுள்ளது. விமான நிலைய கடமையில் ஈடுபட்டு இருந்த குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் பெற்றோர், பிள்ளைகள் ஐவர் ஆகியோரை போலி விசாக்களுடன் பிடித்தனர்.

இவர்கள் ஆப்கானிஸ்தானில் கபுல் என்கிற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது. இக்குடும்பம் பற்றிய மேலதிக தகவல்களை பெறுகின்ற முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

No comments

Powered by Blogger.