பங்களாதேஷில் 200 பேருடன் சென்ற படகு மூழ்கியது - 150 பேரை காணவில்லை
வங்கதேசத்தில், கப்பல் கவிழ்ந்து 150 பேர் மாயமான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா அருகே, 200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஷரியாத்பூர் கப்பல் மேக்னா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவர்களில், 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், கப்பல் விபத்து நடந்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஷஹிதுல் இஸ்லாம் கூறியுள்ளார்
Post a Comment