Header Ads



பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்கும் - ஹக்கீம்



வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் முகமாக அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் பங்கு கொள்ள தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை குறிப்பிட்டார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. யினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குபற்றுவது தொடர்பில் சந்தேகம் நிலவுகிற போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது உறுதியாக விடயம்.

அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மாத்திரம் இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுக்கள் தொடருமாயின் அது இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையாது. பேச்சுக்களில் மூன்றாம் தரப்பாக முஸ்லிம் காங்கிரஸ் பங்குபற்றுவதில் தொடர்ந்தும் உறுதியாக உள்ளதெனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவத்துள்ளார்.

No comments

Powered by Blogger.