Header Ads



இலங்கைக்கு கடலுக்கடியில் மின்சாரம் - இந்தியா பிடிவாதம் பிடிக்கிறதாம்


கடலுக்கடியிலான மின்சார பரிமாற்றத்திட்டத்தை நடை முறைப்படுத்துமாறு இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப ஆய்வு அறிக்கைகளையும் இந்தியா இலங்கையிடம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் உள்ளதாக இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண் டளவிலேயே நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும். இந்தியாவின் அனல் மின்சாரத் திட்டம் சம்பூரில் பூர்த்தியடையுமாக இருந் தால் அதன்மூலம் தேவையான மின்சார அலகுகளைப் பெறக்கூடியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

எனவே, கடலுக்கு அடியிலான மின்சார பரிமாற்றத்திட்டத்துக்கு அதிகளவு செலவுகளை மேற் கொள்ளவேண்டியிருக்கும் என்று இலங்கை அரசு அச்சம் கொண்டிருப்பதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்தியா சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுத்தால் இந்தத் திட்டம் இன்னும் இலங்கைக்கு பாதகங்களை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.