Header Ads



தவணைமுறையில் விமான கட்டணம் செலுத்த ஏற்பாடு


ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்காக கடனட்டையில், தவணைமுறையில் விமானக் கட்டணத்தை செலுத்தக்கூடிய சலுகை முறையினை ஆரம்பித்துள்ளது. இதன்படி விமானக் கட்டணங்கள் கடன் அட்டையினூடாக மூன்று, ஆறு, பன்னிரெண்டு அல்லது 24 மாதங்களில் தவணை முறையில் செலுத்த முடியும்.

இந்தியாவிற்கு ஆகக்குறைத்தது மாதமொன்றுக்கு 725 ரூபா படியும், ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 2 ஆயிரம் ரூபா வீதமும், ஐரோப்பிய நாடுகளுக்கு மாதாந்தம் 4 ஆயிரம் ரூபா வீதமும் இதனை செலுத்தி முடிக்க முடியும். சலுகை அடிப்படையிலான இலகு தவணை முறையானது குடும்பத்தால் அனைவருக்கும் வரும் விடுமுறை காலத்தில் ஒரு புதிய அனுபவத்தை வழங்குமென ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் எதிர்பார்க்கிறது. 

வாடிக்கையாளர்கள் www.srilankan. எனும் இணையத் தளத்தினூடாக தமது கடனட்டையை பயன்படுத்தி விமான டிக்கட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும். கொடுப்பனவுகள் இலங்கை வங்கி, கொமர்சியல் வங்கி, எச். எஸ். பி. சி., செலான் வங்கி மற்றும் ஹற்றன் நெசனல் வங்கி ஆகியவற்றினூடாக தவணை முறையில் செலுத்தமுடியும்.

வர்த்தக செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பிரிவின் தலைவர் மொஹமட் பkல் இதுப் பற்றி கூறுகையில், உலக மக்கள் அனைவரும் அனைத்து நாடுகளுக்கும் விஜயம் செய்து அதனை ரசித்து இன்பத்தை அனுபவிக்க வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக உலக நாடுகள் மிகவும் நெருக்கமடைகின்றன. இருப்பினும் ஒரு வெளிநாட்டுப் பயண மென்றால் ஒன்றுக்கு இரண்டு தடவை அதுப்பற்றி எம்மை யோசிக்க வைப்பது அதன் கட்டணங்களே எனவே தான் சலுகை அடிப்படையில் உ

No comments

Powered by Blogger.