Header Ads



இலங்கையரின் காதை கடித்து துப்பிய பிரிட்டன் பிரஜை

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து இலங்கையர் ஒருவரின் காதை பிரித்தானிய பிரஜையொருவர் கடித்து துண்டாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பிரித்தானிய பிரஜை  கோட்டை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுபோவிலயைச் சேர்ந்த ஒருவரே மைக் டைசன் பாணியிலான இந்நடவடிக்கை குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தொன்றின்போது மேற்படி பிரித்தானிய பிரஜைதனது காதை கடித்து துண்டாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

இத்தாக்குதல் நடைபெற்றபோது வெளிநாட்டுப் பெண்ணொருவர் தம்முடன் நடனமாடிக்கொண்டிருந்ததாகவும் அவர்கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.