Header Ads



பொன்சேக்காவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு உயர் பதவி

கொழும்பு, மேல்நீதிமன்ற நீதிபதியான தீபாலி விஜயசுந்தர உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை அவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதியான சரத்பொன்சேகாவுக்கு எதிராக வெள்ளைக் கொடி விவகார வழக்கில் அவருக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த இரு நீதிபதிகளில் தீபாலி விஜயசுந்தரவும் ஒருவராவார்.

இந்த நீதிபதியின் குடும்ப திருமணமொன்றில் பிரதான சாட்சியளராக மஹிந்த ராஜபக் கையெழுத்திட்டு இருந்ததுடன், திருமண அன்பளிப்பாக புதியரக வாகனமொன்றையும் பரிசளித்ததாக ஈலங்கா இணையம் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.