Header Ads



மாளிகாவத்தை மையவாடியை கபளீகரம் செய்ய தனியார் கம்பனி முயற்சி


மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோத கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக தனியார் கம்னியொன்று மண் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளதாக கொம்பனித்தெரு பள்ளிவாசல் நிர்வாக சபை அறிவித்துள்ளது.

இச்சட்டவிரோத செயற்பாடு காரணமாக குறித்த பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஜனாஸாக்கள் பாதிக்கப்படும் அபாயமிருப்பதாகவும் பிரதேசவாதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் பிரதேச முக்கியஸ்தர்கள் முஸ்லிம் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளிளதும் கவனத்திற்கும் கொண்டுவந்தள்ளனர்.

அத்துடன் முஸ்லிம்களின் மையவாடியை கபளீகரம் செய்யும் இச்சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கையெழுத்து போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.