Header Ads



யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் வகுப்பு பகிஷ்கரிப்பு


யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நுன்கலைத் துறையைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் மாணவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களிடம் பழிவாங்கும் நடவடிக்கையாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இது தொடர்பாக பல்கலைக்கழக நிருவாகத்துடன் தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அந்த முயற்சி கைகூடவில்லை.

No comments

Powered by Blogger.