Header Ads



பன்றிக்கு வைத்த பொறியில் சிக்கி மாமியார், மருமகன் பலி


தலாதுஓயா பகுதியில் கீழ் மயிலம்பட்டி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலியாகியுள்ளனர். 

மாடுகளை மேய்க்கச் சென்ற ஒருவர் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு உயிரிழந்ததோடு அவரை காப்பாற்றச் சென்ற பெண் அந்த இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

இன்று காலை 07.15 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாமியார் (வயது 55) மற்றும் மருமகன் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் மாரஸ்ஸன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தலாதுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.