Header Ads



பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுப்போம் - அமெரிக்கா சூளுரை


ஆப்கன் எல்லைப்பகுதியில் நேட்டோபடை தாக்குதல் நடத்தி‌யபோது பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி நேற்று விடுத்த அறிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு நாங்களும் தாக்குதல் நடத்துவோம் என்றார். 

இந்நிலையில் அதற்கு பதிலடி தரும்வகையில் அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனும் கயானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவும் தங்களுடைய இறையான்மை காத்து கொள்ள அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தங்களை காத்து கொள்ள நாங்கள் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என பதிலடி தந்துள்ளது. 

No comments

Powered by Blogger.