இலங்கை சகோதரிகள் குவைத் முதலாளிகளுக்கு விற்பனை..?
குவைட்டில் உள்ள இலங்கை தூதுவர் காரியாலயத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த இலங்கை பணியாளர்கள் 100 பேர் இன்று திங்கட்கிழமை நாடு திரும்பியுள்ளனர். குவைட் முதலாளிமார்களால் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளான நிலையில் நாடு திரும்பியுள்ள இவர்களில் 78 பெண்களும் அடங்குவர்.
இதனிடையே, முதலாளிமார்களால் பல்வேறு சித்ரவதைகளுக்கு உட்பட்ட நிலையில், பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள பணியார்களை குவைட் நாட்டினருக்கு விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பில் இலங்கை தூதரக அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை பணியாளர்கள் குவைட் முதலாளிமாருக்கு பணத்திற்கான விற்பனை செய்யப்படுவதை, அங்குள்ள மற்றுமொரு இலங்கை குழுவினர் வீடியே செய்துள்ளனர். குறித்த வீடியே குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு கையளிக்கப்பட்டதனை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment