Header Ads



இலங்கையருக்கு சவூதி அரேபியாவில் தூக்குத் தண்டனை


இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு மரண தண்டனையும் மேலும் எட்டு பேருக்கு சவுக்கடி மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியா, ஜித்தா நகரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணி விற்பனை முகவர் ஒருவரை கொலை செய்தமை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டமைக்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஜித்தா நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இத்தண்டனை நேற்று வழங்கியுள்ளது.  தீர்ப்பு வழங்கப்பட்ட குழுவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.